சுக்கிரன் சம்பந்தமான தோஷங்கள் விலக

fdc0e3362bd14221954bdb3dc8bb48c7-1-2

சிலருக்கு ஜாதக ரீதியாக சுக்கிரனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் அவர்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் திருமணம் நடக்காது. சிலருக்கு திருமணம் முடிந்தும் இல்வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. ஜாதகத்தில் சுக்கிரரீதியாக எந்த பாதிப்பு இருந்தாலும் விடாமல் மன உறுதியுடன் செல்ல வேண்டிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரையும், தாயாரையும் பார்த்து வந்தாலே சுக்கிரன் ரீதியாக இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி விடும்.

தூரம் பார்க்காது வெளியூர் செல்ல வேண்டுமே என நினைக்காமல் ஒவ்வொரு வாரமும் ஸ்ரீரங்கநாதரை  தொடர்ந்து தரிசித்து வரவேண்டும். ஸ்ரீரங்கநாதரை பார்க்க உள்ளே நுழைந்தால் ஸ்வாமி தரிசனம் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது. கோவிலில் விற்கப்படும் ஸ்பெஷல் டிக்கெட் வாங்கி சென்றாலும் சில மணி நேரம் நின்றுதான் சென்று பார்க்க முடியும்.

ஸ்ரீரங்கநாதரை பொறுமையாக நின்று தரிசனம் செய்து வருவது நல்லது.தோஷங்கள் அனைத்தும் விலகி பாக்கியம் கிடைக்க 9 வாரங்களாவது ஸ்ரீரங்கம் தொடர்ந்து சென்று பெருமாளை வழிபட வேண்டும்.

சுக்கிரதோஷம் உள்ளவர்கள் மட்டுமல்ல அனைத்து தோஷங்களையும் நிவர்த்தி செய்து பெருமாள் கை கொடுப்பார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.