வேண்டிய வடிவமெடுப்பவன் – தேவாரப்பாடலும், விளக்கமும்


601dbb4f22cc1e8d9970921c1fc035ec

பாடல்

கோலமே மேலை வானவர் கோவே
குணங்குறி இறந்ததோர் குணமே
காலமே கங்கை நாயகா எங்கள்
காலகாலா காம நாசா
ஆலமே அமுதுண் டம்பலம் செம்பொற்
கோயில்கொண் டாடவல் லானே
ஞாலமே தமியேன் நற்றவத் தாயைத்
தொண்டனேன் நணுகுமா நணுகே

விளக்கம்…

அடியவர்களுக்காக அவர்கள் விரும்பிய வடிவம் கொள்பவனே! மேம்பட்ட தேவர்களின் தலைவனே! பண்புகளும் வடிவங்களும் இல்லாமையையே பண்பாக உடையவனே! காலத்தை உன் வயத்தில் அடக்கி இருப்பவனே! கங்கையின் தலைவனே! எங்களுக்குத் தலைவனாக அமைந்தவனாய்க் காலனுக்குக் காலனாக இருப்பவனே! மன்மதனை அழித்தவனே! விடத்தையே அமுதம் போல உண்டு, கூத்தாடும் இடத்தைப் பொன்மயமான கோயிலாகக் கொண்டு கூத்தாடுதலில் வல்லவனே! உலகமே வடிவானவனே! தன்னுணர்வு இல்லாத அடியேன் பெரிய தவத்தை உடைய உனக்குத் தொண்டனாகி உன்னை அணுகுமாறு நீ திருவுள்ளம் பற்றிச் செயற்படுவாயாக.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.