வாயாடி பெத்த பிள்ளை பாடலோடு என்ட்ரி கொடுத்த வனிதாவின் குழந்தைகள்!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இன்னும் 100 வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது, இறுதியை நெருங்க நெருங்க போட்டியாளர்களுக்குள் பாசம் அதிகரிக்கவே செய்கிறது.

பிக் பாஸீம் போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ஆரம்பித்துவிட்டார், ஒவ்வொரு போட்டியாளரின் குடும்பத்தில் இருந்தும், குடும்ப உறுப்பினர்கள் வர ஆரம்பித்துவிட்டனர்.

நேற்றைய நிகழ்ச்சியில் யார் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தர்ஷனின் அம்மா ஷியாமலா மற்றும் தர்ஷனின் சகோதரி துஷாரா ஆகியோர் வந்தனர்.
 

அவர்களை அடுத்து மதிய வேளையில், வாயாடி பெத்தப் புள்ள பாடல் பாடியது, பார்வையாளர்களுக்கே புரிந்துவிட்டது, வனிதாவின் மகள்கள் ஹான் என்று, ஆனால் போட்டியாளர்களால் கணிக்க முடியவில்லை.

a18beb4ef74ecd0bf28c2ecdeb7a2343

மகள்களை பார்த்த வனிதா  சந்தோஷம் பொங்க, பாசமான தாயாக மாறினார். இரண்டாவது மகளை ஏய் அரிசிமூட்டை என்று கிண்டலடிக்க, அனைவரும் சிரித்தனர்.

மற்ற போட்டியாளர்கள் குழந்தைகளுடன் டிக் டிக் யாரது என்ற விளையாட்டையும், ஒன்னு ரெண்டு எண்ணி விளையாடுதல் என்ற விளையாட்டையும் மகிழ்ச்சி பொங்க விளையாடினர்.

தர்ஷன் வனிதாவுடனான பகை எதையும் மனதில் கொள்ளாது இரண்டாவது மகளை தூக்கினார்.

மேலும் குழந்தைகள் தங்களுக்காக சமைத்து தர வேண்டும் என்று கூற, அனைவரும் அம்மா சமைத்ததுதான், சாப்பிடுங்கள் என்று கூற, வனிதா சாப்பாடு போட்டு வந்து இருவருக்கும் ஊட்டி விட்டார். ரௌடி பேபி பாடலுக்கு ஆட சாண்டி இரண்டாவது மகளுக்கு சொல்லிக் கொடுக்க, அனைவரும் அவருடன் சேர்ந்து ஆடினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.