Entertainment
மதுமிதா கையை அறுத்துக் கொள்ளும்போது சிரித்த வனிதா!!
பிக் பாஸ் நிகழ்ச்சி 3 ஆனது அனைவராலும் பேசப்படும் அளவு சென்று கொண்டிருக்கிறது, தயாரிப்புக் குழு டாஸ்க் என்கிற பெயரில் எதையாவது கொடுத்து பிரச்சினையைத் தூண்டுவதிலேயே குறிக்கோளாக உள்ளது. சும்மா இருந்த ஊதிக் கெடுத்ததுபோல, தயாரிப்புக் குழு செய்யும் வேலையானது சும்மா இருப்பவர்களையும் உசுப்பேற்றும்படியாக உள்ளது.

கடந்த வியாக்கிழமை ஹலோ ஆப் ஒரு டாஸ்க் நடத்தியது. அதில் ஒவ்வொருவருடைய கருத்தும் கேட்கப்பட்டது, அப்போது மதுமிதா “வருண பகவானும் கர்நாடகாக்காரர் தான் போல. அதனால் தான் தமிழ்நாட்டுக்கு மழையே தர மாட்டேன் என்கிறார்” என்று சொல்ல அங்கே இருந்த சகபோட்டியாளர் ஷெரீன், கர்நாடகாவை சேர்ந்த என் முன்னே எப்படி இப்படிக் கூறலாம் என சண்டையிட, இதனை சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட கவின்- சாண்டி குரூப் தமிழ், தமிழ்ப் பொண்ணு என்று எல்லாம் சொல்லும் நீங்கள் தமிழ் மக்களுக்காக உயிரை கொடுக்க முடியுமா எனக் கேட்டுள்ளனர். அதனால் ஆவேசமான மதுமிதா கையை அறுத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும் கையை அறுத்துக் கொண்டபோது, வனிதா இதெல்லாம் சும்மா, ஒண்ணும் ஆகாது என்பதுபோல கேலி செய்துள்ளார், அதேபோல் மற்றவர்களும் உதவ முன்வராமல் அங்கேயே இருந்துள்ளனர்.
இந்த மனிதத் தன்மையற்ற செயலை நினைத்து பலரும் கடும் கோபத்தில் உள்ளனர்.
