இந்தியாவில் தமிழகத்தில் உள்ள அஞ்சல் துறையில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அரசாணை வெளியிட்டுள்ளது. 4442 காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வேலைக்குத் தகுதியான இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளைஞர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற கேட்டுக் கொள்கிறோம். பணியிடம் தமிழ்நாடு முழுவதும் ஆகும்.
பணி Branch Postmaster (BPM) மாத சம்பளம் ரூ.12,000 – 29,380 , Assistant Branch Postmaster (ABPM) மாத சம்பளம் ரூ.10,000 – 24,470 , Dak Sevak மாத சம்பளம் ரூ.10,000 – 24,470 ஆகும். வயது 15.03.2019 அன்று 20 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் தகுதியானவர்கள். உள்ளூர் மொழிகள் எழுத மற்றும் பேச தெரிந்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 16.04.2019 விண்ணப்பிக்க http://appost.in/gdonline மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முழுமையான விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் இங்கு காணவும். https://images.dinmani.com/uploads/user/resources/pdf/2019/3/12/Tamilnadu19-1.pdf