Career
தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வேலை!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை – Various
பணி விவரம்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போருக்கானது வயது வரம்பு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும். அதிகபட்ச வயது வரம்பானது 30 வயது பூர்த்தி அடைந்து இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.11,600/- முதல் அதிகபட்சம் ரூ.25,000
கல்வித்தகுதி: :
இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை – இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போருக்கு தமிழ் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.
பணி அனுபவம்:
இலை விபூதி போத்தி, திருவலகு, பலவேலை – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. Interview
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் 628 215
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 09.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
