Career
இந்து சமய அறநிலையத் துறையில் குலசை கோயில் மடப்பள்ளி காலிப்பணியிடம் அறிவிப்பு!!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள குலசை கோயில் மடப்பள்ளி காலிப்பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
குலசை கோயில் மடப்பள்ளி – 4
பணி விவரம்:
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காலியாக உள்ள குலசை கோயில் மடப்பள்ளி காலிப்பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 18 வயது
அதிகபட்சம் 35 வயது
சம்பள விவரம்:
சம்பள விவரம் – குறைந்தபட்சம் ரூ.12,700/- முதல் அதிகபட்சம் ரூ.35,000
கல்வித்தகுதி: :
குலசை கோயில் மடப்பள்ளி – இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்போர் தேவார தமிழ் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். நெய்வேத்திய மற்றும் பிரசாதங்கள் தயார் செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
குலசை கோயில் மடப்பள்ளி – பணி அனுபவம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தேர்வுமுறை :
1. நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
இணை ஆணையர்/ செயல் அலுவலர்,
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் 628 215
என்ற முகவரிக்கு தங்களது விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் 08.03.2021 ஆம் அன்றுக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
