உத்தரவிடு -திருவெம்பாவை பாடலும், விளக்கமும் -27


5e051ec144d71a612ab960b1504177a8

பாடல்…

அது பழச்சுவையென, அமுதென, அறிதற்கு
அரிதென, எளிதென”, அமரும் அறியார்,
“இது அவன் திருவுரு; இவன் அவன்” எனவே;
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந்தருளும்
மதுவளர் பொழில் திருஉத்தர கோச
மங்கையுள்ளாய் ! திருப்பெருந்துறை மன்னா !
எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்;
எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே !

பொருள்

“அந்தப் பரம்பொருள் பழத்தின் சுவைபோல இனியது,
அமுதம் போன்றது, அறிந்து கொள்வதற்கு அரியது, எளியது” என
அறிவால் உறுதி பெற தேவர்களுக்கும் இயலவில்லை !
(அப்படிப்பட்ட தாங்கள்) “இதுவே அந்தப் பரம்பொருளின் திருவுருவம். இவர்தான் அந்தப் பரம்பொருள்.” என்று (கூறத்தக்க எளியமுறையில்) எங்களை ஆண்டுகொண்டு இங்கே எழுந்தருளியுள்ளீர் ! தேன் மிகுகின்ற சோலைகள் உள்ள திருஉத்தரகோச மங்கையில் வீற்றிருப்பவனே!  ருப்பெருந்துறைக்கு அரசே ! எது எங்களைப் பணி கொள்ளும் வகை ? அதன்படியே நடப்போம் !எம்பெருமானே ! பள்ளி எழுந்தருள்க !

திருவெம்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்… 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews