உலக நாடுகளை உஷார்படுத்திய ஐ.நா… விரைவில் இதற்கு அனைத்து நாடுகளிலும் கட்டுப்பாடு!

நெகிழி மாசுபாட்டை ஒழிப்பது தொடர்பாக அனைத்து நாடுகளையும் சட்டப்பூர்வமாக கட்டுப்படுத்தும் உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை 2024ம் ஆண்டிற்குள் உருவாக்குவது என ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் சபையின் ஐந்தாவது அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலக வரலாற்றில் முதல்முறையாக நெகிழியைக் கட்டுப்படுத்துவதற்கான உலகளாவிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்காக 175 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் சூழலியலாளர்கள் கலந்துகொண்ட மாநாடு ஐநாவின் தலைமையின்கீழ் நைரோபியில் இம்மாதம் தொடங்கி நடைபெற்றுவந்தது.

இது நெகிழியின் உற்பத்தி முதல் (பெட்ரோலிய அகழ்வு முதல்) கழிவுநீக்கம் வரையிலான முழுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கூட்டத்தின் ஐந்தாவது அமர்வில் (UNEA 5.2) நெகிழியை 2024 ஆம் ஆண்டுக்குள் நெகிழியைக் கட்டுப்படுத்த சட்டப்பூர்வமாக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலகளாவிய ஒப்பந்தத்தை உருவாக்க உறுதியளித்து உலக நாடுகள் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இது நெகிழியை ஒழிப்பதில் மனிதருக்கும் பூமிக்கும் கிடைத்த வெற்றி என்று ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பான UNEP தெரிவித்திருக்கிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment