பொன்னியின் செல்வன் பட பிடிப்பில் கலந்து கொண்ட திரிஷா! வெளியான கலக்கல் புகைப்படம்!

வரலாற்று திரைப்படமான பொன்னியின் செல்வன் பகுதி 1 (PS-I) சமீபத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை தந்தது.சமீபத்தில் இந்த படம் தனது 50வது நாளை தொட்டது. பாக்ஸ் ஆபிஸில் உலகளவில் ரூ. 500 கோடியைக் கடந்ததன் மூலம் நினைத்துப் பார்க்க முடியாத சாதனையைச் செய்திருக்கிறார் பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் இயக்கத்தில் இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் , கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் முன்னணியில் நடித்துள்ளனர், மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து படத்தை தயாரித்தன.மொத்தமாக 5 பாகம் கொண்ட புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்துள்ளது.

படத்தின் இயக்குனர் முதல் பாகம் வெளியாகி ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என முன்னதாக கூறியது குறிப்பிடத்தக்கது,இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

 

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்தாண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நோயால் அவதிபடும் சமந்தாவை பார்த்து தன்னம்பிக்கை வருவதாக கூறும் தயாரிப்பாளர் விக்ரம்!

படத்தில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் ஒன்றான குந்தவை திரிஷா தற்போழுது படப்பிடிப்பில் இணைந்துள்ளார், அவரின் புகைப்படம் தற்போழுது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

திரிஷாவின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாகி வருகின்றனர்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...