நம் தமிழகத்திலேயே அதிகமும் உத்தரவாதம் இல்லாத தொழில் என்றால் அதனை அனைவரும் கூறுவதே மீன்பிடித்தொழில் என்றுதான். ஏனென்றால் பல நேரங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்றால் கரைக்கு திரும்புவதில்லை.
காரணம் அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று பலமுறை இலங்கை அரசால் கைது செய்யப்படுகின்றனர். ஒரு சில நேரங்களில் இலங்கை கடற்படையால் அவர்களது படகுகள் சேதம் அடைந்து அகதிகளாக பிடிக்கப்படுகின்றனர்.
ஒரு சில மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் தான் அவர்கள் மீன்பிடி தொழிலை செய்துவருகின்றனர். இவ்வாறுள்ள நிலையில் தற்போது மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத சூழல் ஒன்று உருவாகி உள்ளது.
மீனவர்களுக்கு மீன்பிடி தடைகாலம் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது. அதன்படி தமிழகம், புதுச்சேரி வங்க கடலில் 61 நாள் மீன்பிடி தடைகாலம் தொடங்கியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை; வங்கக்கடலில் மீன் இனப்பெருக்கம் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.