இன்றும் நாளையும் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் தகவல்!

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும் நாளையும் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து வருகின்ற 26-ஆம் தேதி ராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும் புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ போன்ற பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

அதே போல் 27-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌, திருச்சுராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர்‌ போன்ற மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையை ஓட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌ என்பதால் மீனவர்கள் இன்றும், நாளையும் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment