TNPSC 1089 காலிப் பணியிடங்கள்: வெளியானது அதிரடி அப்டேட்!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி பணியிடங்களுக்கான அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது தொற்று பரவலானது குறைந்துள்ளதால் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

அந்த வகையில் நில அளவர், வரைவாளர், அளவர்/உதவி வரைவாளர் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி, இன்று முதல் ஆகஸ்ட் 8-ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்றும் இவர்களுக்கு கணினி வழியாக வருகின்ற நவம்பர் 11-ம் தேதி தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு 32 -க்கு கீழ் இப்பதவிகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர் மற்றும் விதவைகள் ஆகிய பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை என கூறப்பட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

Capture 30

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment