டிஎன்பிஎஸ்சி குரூப் 4: தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும் – பகுதி 3

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் புகழ் பெற்ற நூல்களையும் அதன் ஆசிரியர்களையும் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் புகழ் பெற்ற நூலாசிரியர்கள் எழுதிய நூல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ் நூல்களும் நூல் ஆசிரியர்களும்:

முடியரசன் எழுதிய நூல்கள்:

பூங்கொடி,

வீரகாவியம்,

காவியப் பறவை,

புதியதொரு விதி செய்வோம்,

ஊன்றுகோல்

 

வி.முனுசாமி எழுதிய நூல்கள்:

வள்ளுவர் உள்ளம்,

வள்ளுவர் காட்டிய வழி,

திருக்குறளில் நகைச்சுவை,

திருக்குறள் உரை விளக்கம்,

சிந்தனை களஞ்சியம்

 

அதி வீரராம பாண்டியர் எழுதிய நூல்கள்:

காசிக் கண்டம்,

வெற்றி வேற்கை,

நறுந்தொகை,

லிங்க புராணம்,

வாயுசம்கிதை.

நைடதம்,

கூர்ம புராணம்,

திருக்கருவை அந்தாதி

 

கோமகள் என்னும் விஜயலட்சுமி எழுதிய நூல்கள்:

உயிர் அமுதாய்,

நிலாக்கால நட்சத்திரங்கள்,

அன்பின் சிதறல்,

அன்னை பூமி

 

சுஜாதா எழுதிய நூல்கள்:

தலைமைச் செயலகம்,

என் இனிய இந்திரா,

மீண்டும் ஜீனோ,

ஸ்ரீரங்கத்து தேவதைகள்,

தூண்டில் கதைகள்,

கணிப்பொறியின் கதை

 

தாராபாரதி எழுதிய நூல்கள்:

புதிய விடியல்கள்

இது எங்கள் கிழக்கு

விரல் நுனி வெளிச்சங்கள்

 

கு.ப.ராஜகோபாலன் எழுதிய நூல்கள்:

ஏர் புதிதா,

அகலிகை,

ஆத்ம சிந்தனை

 

ஜெயகாந்தன் எழுதிய நூல்கள்:

எதற்காக எழுதுகிறேன்

யாருக்காக அழுதான்

பிரளயம்

ரிஷிமூலம்

பிரம்ம உபதேசம்

சுந்தர காண்டம்

உன்னைப்போல் ஒருவன்

பாரிசுக்குப் போ

கைவிலங்கு

கருணையினால் அல்ல

சினிமாவுக்குப் போன சித்தாள்

இன்னும் ஒரு பெண்ணின் கதை

ஒரு கதாசிரியரின் கதை,

சில நேரங்களில் சில மனிதர்கள்

ஊருக்கு நூறு பேர்

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment