News
இபாஸ் ரத்து, மெட்ரோ ரயில்கள் -பேருந்துகள் ஓடும்: இன்னும் என்னென்ன தளர்வுகள்?

தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கடைபிடிக்க வேண்டிய நிபந்தனைகள் மற்றும் தளர்வுகளை தமிழக அரசு சற்றுமுன் அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவல்கள் பின்வருமாறு:
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை ரத்து; தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி
ஆனால் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு செல்ல இ-பாஸ் அவசியம். அதேபோல் வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கு இ-பாஸ் நடைமுறை தொடரும். ரிசார்ட்டுகள், கேளிக்கை விடுதிகள், கிளப்களை திறக்க அனுமதி
திரையரங்குகள் இயக்க தடை தொடரும். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கடைகளும் இரவு 8.00 மணி வரை இயங்க அனுமதி
செப் 7ம் தேதி முதல் சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்குகிறது. செப்டம்பர் 1 முதல் சென்னையிலும் மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடும்
ஞாயிற்றுக்கிழமைகளில் அமல்படுத்தப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து
மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை தொடரும். வழிபாட்டு தலங்களில் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதி; நிகழ்ச்சிகள் நடத்த தடை நீட்டிப்பு
