குட்நியூஸ்!! 25 ஆயிரம் பேருக்கு வீடு… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்துள்ளார்.

1.நடப்பு நிதியாண்டில் நிலப் உரிமையுள்ள பொருளாதாரத்தில் நலிவுற்ற பயனாளிகளுக்கு தாமாகவே வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டப்படும்.

2. நகர்ப்புறங்களில் வாழும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த நிதியாண்டில் 25 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும்.

3.மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற சிதிலடமைந்த 7,500 அடுக்குமாடிக் குடியிருப்புகள் ரூ.1200 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த ஆண்டு மறுகட்டுமானம் செய்யப்படும்.

4.சென்னை மற்றும் இதர நகரங்களில் உள்ள 40,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூபாய் 100 கோடி திட்ட மதிப்பீட்டில் இந்த நிதியாண்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

5.குடியிருப்பு தாரர்கள் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மாதாந்திரத் தவணைத் தொகையினை இணையதள செயலி மூலம் குறித்த காலத்திற்குள் சுலபமாக செலுத்த வழி வகை செய்யப்படும் உள்ளிட்ட 10 முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment