துன்பங்களிலிருந்து விடுபட சனிபகவான் மூலமந்திரம் சொல்லி வழிபடுவோம்!!


துஷ்டனை கண்டால் தூர விலகு என பெரியவர்கள் சொல்வார்கள். துஷ்டனை மட்டுமல்ல! சனிபகவானை கண்டாலும் பயந்து தள்ளியே நிற்போம். உண்மையில் நாம் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறே அவர்  நமக்கு பலன்களை அளிக்கிறார். தராசு முள் போல எந்த பக்கமும் சாயாமல் பலாபலன்களை கொடுப்பதில் எமனுக்கும், சனிபகவானுக்கும் நிகர் எவரும் இல்லை. கடவுளர்கள்கூட தங்கள் பக்தர்களுக்காக விதியை மாற்றி அமைத்த வரலாறுகள் உண்டு. மனதில் இருக்கும் இறைவனுக்கு பயந்து நல்வழியில் நடந்தால் நற்பலன்களை பெறலாம்.

சனியை போல கொடுப்பாரும் இல்லை. கெடுப்பாருமில்லை. சனி பகவானின் அருளை பெற்றால் வாழ்வில் வசதிகள் பெருகும், நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியத்துடன் நீண்டகாலம் வாழலாம். சமுதாயத்தில் அந்தஸ்து கூடும். தலைமைத்துவதோடு வாழ வழி உண்டாகும்.

சனி பகவான் காயத்ரி மந்திரம்

‘ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்’

பொருள்: காகக் கொடியை உடையவரும், கையில் கமண்டலத்தை கொண்டவரும், மெதுவாக நகரும் தன்மை கொண்டவருமான சனி பகவானை நினைத்து தியானம் செய்வதன் பலனாக அவர் நம்மை காத்தருள்வார். மேற்கொண்ட மந்திரத்தை சனிக்கிழமைகளில் 108 முறை ஜெபிப்பதன் பலனாக மேலே கூறிய பலன்கள் அனைத்தையும் பெறலாம்.

சனிபகவான் தொந்தரவிலிருந்து தப்பிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்யலாம். அல்லது அருகிலிருக்கும் நவக்கிரக சன்னிதிக்கு சென்று வழிபட்டு வரலாம். அல்லது அவரவர் வசதிக்கு தகுந்தபடி ஆறு மாதம் அல்லது வருடத்திற்கு ஒருமுறை உடல் ஊனமுற்ற ஏழைகள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களுக் கு புது உடை தானம் செய்யலாம். தினமும் கருப்பு நிற நாய்களுக்கு பிஸ்கட் அல்லது இன்ன பிற உணவை உண்ண தருவது சனி பகவானின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்யும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews