ஆலியாபட்டைத் தேர்ந்தெடுக்க இதுதான் காரணம்… ராஜமவுலி சொன்ன விளக்கம்!!

பாகுபலி1, பாகுபலி 2 என பிரமாண்ட படத்தைக் கொடுத்தவர்  ராஜமவுலி.

இந்தப் படங்களை அடிச்சிக்க வேற எந்தப் படமும் இல்லை என்பதுபோல் வசூலினையும் குவித்தது. தற்போது ராஜமவுலி ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரகனி, அலியா பட் எனப் பல முன்னணி நடிகர்களைக் கொண்டு ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இரத்தம் ரணம் ரௌத்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படமும் பாகுபலி படத்தினைப் போல் பல மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

e4fbce861305cf45410b363c1b68db2f

தென்னிந்திய சினிமா நடிகைகளை விடுத்து பாலிவுட் நடிகை ஆலியாபட் ஏன் இந்தப் படத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்தின் இயக்குனர் ராஜமௌலி அதற்கான பதிலை விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “இப்படத்தில் இரண்டு பெரிய நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அதேபோல் அவர்களை மிஞ்சும் அளவு நடிக்கக்கூடிய ஒரு ஹீரோயின் தேவை என நினைத்தநிலையில் சிலர் என் கவனத்திற்கு வந்தனர்.

அவர்களில் ஆல்யாபட் இக்கதைக்கு பொருத்தமாக இருப்பார் என நினைத்தேன், மிகவும் அப்பாவியானதாகவும், ஆபத்தானதாகவும் இருக்கும் இந்தக் கதாபாத்திரத்தில் அவர் எதிர்பார்த்தபடியே பொருந்தியுள்ளார்.” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...