இந்திய ஒற்றுமை பயணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியிலிருந்து இந்திய ஒற்றுமை பயணத்தை ஆரம்பித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த ஒற்றுமை பயணத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்த நிலையில் இந்த பயணம் தமிழ்நாடு கேரளா ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேசம் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களை கடந்து தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்த பயணம் காஷ்மீரிலும் முடிவடையப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் ரிசர்வ் வங்கியின் தலைவர் உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
மக்கள் நீதி கட்சியின் தலைவர் கமலஹாசன் இந்த பயணத்தில் சமீபத்தில் கலந்து கொண்ட நிலையில் தற்போது விடுதலை செய் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மற்றும் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டனர். இது குறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
புது தில்லியில் திச- 24 அன்று #இந்திய_ஒற்றுமை_பயணத்தில் திரு.@RahulGandhi அவர்களுடன் சுமார் 1.15 மணி நேரம் நடந்தேன்.
மக்களை எழுப்பும்
மகத்தான பயணம்.
மனுவாத சக்திகளை
வீழ்த்தும் பயணம்.அநீதிக்கு எதிராக ஆர்த்தெழுந்த பயணம். அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் பயணம்.#BharatJodaYatra pic.twitter.com/M33KoISDMO
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 26, 2022
திமுக கூட்டணியில் காங்கிரஸ் ஒருவேளை கழற்றிவிடப்பட்டால் காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றும் அந்த கூட்டணியில் மக்கள் நீதி மையம், விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் இணிஅயும் என்றும் கூறப்படுகிறது.