
சிறப்பு கட்டுரைகள்
பேரறிவாளன் வழக்கு பயணித்த முழு பாதை!!…
1992ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இரவு பத்து இருபது மணிக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள் 1990ஆம் ஆண்டு ஜூன் 11ஆம் தேதி 19 வயதான பேரறிவாளனை கைது செய்தனர்.
பின்னர் 1992ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி சென்னையில் உள்ள சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை முழுவதும் நிறைவடைந்து 1998ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு மரண தண்டனை விதித்து தடா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்ட நிலையில் பேரறிவாளன் முருகன் சாந்தன் நளினி ஆகியோரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி உறுதி செய்து வழக்கில் சிக்கிய மற்ற மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியதோடு 19 பேரை விடுதலை செய்தது.
பின்னர் 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுக்களை அனுப்பினர்.
2006ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த 472 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட போதும் நளினி ராபர்ட் பயாஸ் ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு விடுதலை கிடைக்கவில்லை.
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் இருந்த காலகட்டத்தில் பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரின் கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு ஆணைப்படி தாங்கள் விடுதலை செய்யப்படாததை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மனு 2008ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. சுமார் 4 ஆண்டுகள் கருணை மனுக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த சூழலில் 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவித்தார்.
இதனையடுத்து 11 ஆண்டுகளாக தங்களுடைய மனுக்களை நிலுவையில் வைத்ததால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் இதனை கருத்தில் கொண்டு தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்கு தொடர்ந்த நிலையில் தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் 2014ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வனக் கொள்ளையர்கள் வீரப்பனின் உதவியாளர்கள் உட்பட 12 பேருடன் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் குறைத்தது. பின்னர் 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 19ம் தேதி ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக தீர்மானத்தை தமிழக அரசு சட்டப் பேரவையில் நிறைவேற்றியது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை நாடிய மத்திய அரசு 7 பேரையும் 3 நாட்களுக்குள் விடுவிக்க தடை ஆணையை பெற்றதுடன் சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது. இதனையடுத்து வழக்கு 2014 ஏப்ரல் 25ஆம் தேதி 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது வழக்கு 2015 டிசம்பர் இரண்டாம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் குற்றவாளிகளை விடுவிக்க முடியாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 161 ஆவது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை என்று குறிப்பிட்டிருந்தது.
இதன்படி 2018ஆம் ஆண்டு செப்டம்பரில் 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் அமைப்பு சட்டத்தின் 161ஆவது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என்று மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. பின்னர் 2020ஆம் ஆண்டில் காந்தி கொலை குற்றவாளிகள் மீதான தமிழக அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் அமைச்சரவை பரிந்துரையின் மீது ஆளுநர் முடிவெடுக்க உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம் கால தாமதத்தை காரணம் காட்டி அவர்களை விடுவிக்க நீதிமன்றமே கட்டாயப்படுத்தும் என்று எச்சரித்தது. இதனைத் தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு மே இருபத்தி எட்டாம் தேதி பேரறிவாளன் பரோலில் தனது வீட்டிற்கு வந்த நிலையில் உடல் நலக்குறைவால் 10 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.
ஏகே 61 சூட்டிங் – அஜித்தின் லேட்டஸ்ட் கெட்டப் !! மாஸ் லுக் !!
