25 உழவர் சந்தைகள் புனரமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
25 உழவர் சந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகள் செய்து புனரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோயம்புத்தூர், செங்கல்பட்டு, ஈரோடு, கள்ளக்குறிச்சி, மதுரை, நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், திருப்பூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 25 உழவர் சந்தைகளை புனரமைக்க 8.75கோடி நிதி ஒதுக்கீடு.
அலுவலக அறை புதுப்பித்தல், கழிப்பறை அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், குடிநீர் அமைப்பு, பாதுகாப்பு சுவர், மின்னணு சாதனங்கள் பொருத்துதல், வடிகால் மறுசீரமைப்பு, நடைபாதை அமைத்தல், சுவர்களில் வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.