கடந்த ஓரிரு மாதங்களாகவே இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கையில் உள்ள மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இலங்கையிலுள்ள ராஜபக்சக்கள் தங்களது பதவி விலக வேண்டும் என்றும் அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் எதிரொலியாக இலங்கை பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அவர் பதவி விலகிய உடன் இலங்கையில் அமைதலாக நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் தாக்கியதாகவும் தெரிகிறது.
மேலும் போராட்டக்காரர்கள் தாக்கியதில் ஆளுங்கட்சி எம்பி ஒருவர் உயிரிழந்தார். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.
அவர் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் பிரதமராக பதவியேற்றதும் குறிப்பிடத்தக்கது. இவர் பிரதமரான பின்னர் இலங்கையில் போராட்டம் தணியபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நிலைமை படுமோசமாக அமைந்துள்ளதாக தெரிகிறது.
இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின்னரும் போராட்டங்கள் தொடர்கிறது. அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகும்வரை போராட்டங்கள் ஓயாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.