தன் நடிப்பாலும் தனது திறமையாலும் மக்கள் மனதில் நல்லதொரு இடத்தினை பிடித்தவர் நடிகர் விஷால். நடிப்பில் வெளியான தாமிரபரணி, திமிரு போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது, மேலும் இப்படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து வெளியாகி நல்லதொரு ஹிட் கொடுத்ததால் இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானதே என்றே கூறலாம். அதன் பின்னர் சில தடுமாற்றங்கள் காணப்பட்டது. ஆயினும் தற்போது அவர் போலீஸ் மற்றும் சில பல வீரர்கள் கதாபாத்திரத்தில் நடிப்பதால் அவை ஓரளவு வெற்றி பெற்று மக்கள் மனதில் நல்லதொரு இடத்தைப் பிடித்துள்ளது.
மேலும் அவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான பூஜை அதைத் தொடர்ந்து வெளியான அயோக்கியா, இரும்புத்திரை போன்ற படங்கள் இவருக்கு மக்கள் மனதில் மீண்டும் ஒரு இடத்தில் உருவாக்க வாய்ப்பாக இருந்தது. மேலும் பல பல சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாகவே காணப்படுகிறது. இத்தகைய நடிகர் விஷால் தற்போது தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் தியாகராயநகர் துணை ஆணையரிடம் மோசடி புகாரை அளித்துள்ளார்.
மேலும் விஷால் தயாரித்த சில படங்களுக்கு ஆர்பி சவுத்ரி லட்சக்கணக்கில் நிதி உதவி செய்ததாகவும் தகவல் வெளி கூறியுள்ளார். மேலும் பணத்தை திருப்பி கொடுத்த பின்னரும் புரோநோட் பத்திரத்தை தராமல் இழுத்தடிப்பது மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார். மேலும் புரோநோட் பத்திரத்தை வைத்து மோசடி செய்ய திட்டமிட்டதாக சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார் அளித்துள்ளார்.