இன்றைய தினம் 67வது தேசிய திரைப்பட விருது விழா புதுடெல்லியில் நடைபெற்றது. அதில் தமிழ் சினிமாவில் உள்ள பலருக்கும் விருது வழங்கப்பட்டது.அசுரன் படத்திற்கு பல தேசிய விருதுகள் கிடைக்க பட்டதாக காணப்படுகிறது விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் தனுஷ் பெற்றிருந்தார். சிறந்த துணை நடிகருக்கான விருதை சூப்பர் டிலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேது பெற்றிருந்தார்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தாதா சாகப் பால்கே பெற்றிருந்தார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினியை வாழ்த்தி இருந்தார். அவரை தொடர்ந்து தற்போது தமிழக ஆளுநரும் ரஜினிகாந்தை வாழ்த்தியுள்ளார்.
அதன்படி இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு ஆளுநர் ஆர் என் ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய பொன்நாளாகும் இந்நாள் என்றும் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள் பல நீடூடி வாழ இறைவனை வேண்டுகிறேன் என்றும் ஆளுநர் ஆர் என் ரவி கூறியுள்ளார்.