தற்போது நம் தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று காலம் நிறைவு பெற்றது. இதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக காணப்படுகிறது. அதன்படி வடகிழக்கு பருவமழை தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, கேரளாவை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, தெற்கு கர்நாடகா பகுதிகளிலும் தொடங்கியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளில் இருந்து விலகியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பான அளவில் தான் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு 48 சென்டிமீட்டர் பெய்தது. இது இயல்பை விட இருபத்தி நான்கு சென்டிமீட்டர் அதிகம் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், கரூர், திருப்பூர், திருவாரூரில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.