கிறிஸ்துமஸ் பண்டிகை முடிந்ததும் இரவு நேர ஊரடங்கு! நாளை இரவு முதல் அமல்: உத்தரபிரதேச மாநில அரசு அறிவிப்பு;

சில தினங்களாகவே நம் இந்தியாவில் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் நேற்றைய தினம் தமிழகத்தில் புதிதாக முப்பத்தி மூன்று பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டன.

ஒமைக்கிரான்

இந்நிலையில் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி கொண்டே வருகின்றன. அதன் ஒரு கட்டமாக உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி ஒமைக்ரானை கட்டுப்படுத்த மத்திய பிரதேசத்தை தொடர்ந்து உத்தரப் பிரதேசத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒமைக்ரான் பரவலைத் தடுக்க உத்தரப்பிரதேசத்தில் திருமண நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரவு நேர ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment