தமிழ் சினிமாவில் டாப் நடிகர்கள் என்றால் அது ரஜினி கமல் என்ற அடையாளம் மட்டுமே உள்ளது. ஆனால் இவர்கள் ஹீரோவாக நடித்த காலகட்டத்தில் இவர்களுக்கே டஃப் கொடுத்த பல நடிகர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த வகையில் 80களில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் மோகன்.
இவரை மோகன் என்று அழைப்பதைவிட மைக் மோகன் என்று தான் அழைப்பார்கள். காரணம் இவரது படங்களில் பெரும்பாலும் மைக்குடன் தான் இருப்பார். கமல் நடிப்பில் வெளியான கோகிலா படம் மூலம் அறிமுகமானவர் தான் மோகன். அதன் பின்னர் மூடுபனி படம் மூலம் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக உருவெடுத்தார்.
இவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தது. 80களில் வெள்ளி விழா நாயகன் என அழைக்கப்பட்டவர் தான் மோகன். ஏனென்றால் இவரின் படங்கள் அனைத்துமே தியேட்டரில் வெள்ளி விழா காணும். ரஜினி கமல் படங்களுக்கு போட்டியாக கூட மோகன் படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது.
ஆனால் சில காரணங்களால் இவர் பட வாய்ப்புகள் இழந்து நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் திரையுலகில் அடுத்த இன்னிங்சை தொடங்க உள்ளாராம். ஆமாங்க பலர் தற்போது சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து வரும் நிலையில் நடிகர் மைக் மோகனும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.
அதன்படி தமிழ் சினிமாவில் 87 வயதான சாருஹாசனை ஹீரோவாக வைத்து தாதா87 என்ற படத்தை இயக்கிய இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி இயக்க உள்ள புதிய படத்தில் தான் மோகன் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.