மறந்துடாதீங்க!! TNPSC குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!!

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் 161 பணியிடங்களுக்கான குரூப் 5ஏ எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன் படி, டிகிரி படித்தவர்கள் அரசு அலுவலகங்களில் துறை சார்ந்த பணிகளிலில் குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் இதற்கு தகுதி உடையவர்கள் என டிஎன்பிஎஸ்சி ஆணையம் தெரிவித்துள்ளது.

அதே போல் இவர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும் என்றும் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.

இந்நிலையில் இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,34,200 வரை எனவும் https://www.tnpsc.gov.in என்ற இணையத்தள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.