’ஆட்டம் இன்னும் முடியவில்லை’…. பா.ஜ.க-வுக்கு சவால்விடும் மம்தா !!
இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தலைவர் தேர்தலில் தங்களின் ஆதரவு இல்லாமல் பா.ஜ.க தேர்தலில் வெற்றி பெற முடியாது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அவர் தங்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல் பாரதிய ஜனநாயக கட்சியினால் கப்பல் ஓட்டமுடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதனிடையே உபி,கோவா,பஞ்சாப்,மணிப்பூர்,உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களின் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனநாயக கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் உத்திரபிரதேசத்தில் 250 இடங்களில் மட்டுமே அந்த கட்சியால் வெல்ல முடிந்தது. இந்த நிலையில் தற்போதைய குடியசு தலைவர் ராம் நாத் கோவிந்த் பதவி காலம் இந்த ஆண்டு ஜூலை 5 தேதி முடிவடைய உள்ளது. இதனால் ஜூன் அல்லது ஜூலையில் குடுயரசு தலைவர் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
இந்த தேர்தலில் எம்.பி-கள் மற்றும் எம்.எல்.ஏ- க்கள் மட்டும் வாக்களிப்பர். 213 எம்.எல்.ஏ- களை கொண்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் உறுதியாகியுள்ளது.
ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக ஆட்டம் இன்னும் முடியவில்லை என்று மம்தா பானர்ஜி கூறி இருப்பது பல்வேறு யுகங்களை கிளப்பியுள்ளது.
