கடந்த மாதம் கைதாகி இன்று விமானம் மூலம் சென்னை வந்த மீனவர்கள்!!

பொதுவாக மீனவர்கள் கடலுக்கு சென்றால் அவர்கள் திரும்பி வருவது அபூர்வமாக காணப்படுகிறது. ஏனென்றால் பல நேரங்களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுகின்றனர்.

அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தார்கள் என்று கூறி தமிழக மீனவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்கின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் கைதான தமிழக மீனவர்கள் தற்போது தாயகம் திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கடந்த மாதம் பிப்ரவரியில் கைதான 15 மீனவர்கள் தற்போது தாயகம் திரும்பினார். இலங்கை கடற்படையால் பிப்ரவரி எட்டாம் தேதி சிறை பிடிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் தற்போது தாயகம் திரும்பினார்.

கொழும்பில் இருந்து விமானம் மூலம் ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்து சென்றனர். சென்னையிலிருந்து தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த வேன் மூலம் 15 மீனவர்கள் ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பதினைந்து மீனவர்களின் குடும்பம் நிம்மதியில் உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment