கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரம் ஏப்ரல் 2022 வரை

fb98f47db069c860e5d6241035423efb

உங்கள் கடன் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்த நேரங்கள்! மார்ச் 2021 முதல் ஏப்ரல் 2022 வரை

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் கர்மவினைகளை அனுபவிக்கவே பிறந்திருக்கின்றோம்;இதில் இருந்து மீள்வதற்கும் வழிமுறைகள் இருக்கத்தான் செய்கின்றன;

நமது முன்னோர்களாகிய பித்ருக்கள் இங்கே வசிக்கும் போது அவர்கள் செய்த கருமவினைகளில் 8 இல் ஒரு பங்கை மட்டும் தான் நாம் அனுபவிக்கின்றோம்;

மீதி அனைத்தும் நமது கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்தவைகளைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது துயரங்கள் அல்லது மன உளைச்சல் என்று அனைத்தும் அல்லது ஏதாவது ஒன்று இரண்டை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்;

கடன் என்பதும் கர்மவினையே! கீழே கொடுக்கப்பட்டிருக்கும் நேரப்பட்டியலை மைத்ர முகூர்த்த நேரம் என்று அழைக்கின்றார்கள்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பித் தரவேண்டும்;நமக்கு கடன் கொடுத்தவர்,அந்த அசலை தமது கணக்கில் வரவு வைக்க வேண்டும்;

இந்த இரண்டு நடைபெற்றுவிட்டால்,அதன் பிறகு அந்தக் கடன் படிப்படியாக தீர்ந்துவிடும்;

மாரிமுத்து என்பவரிடம் ரூ.1,00,000/-கடன் வாங்கியிருந்தால்,இந்த மைத்ர முகூர்த்த நேரத்தின் மைய பாகத்தில் ரூ.1000/-அல்லது ரூ.5000/-என்று உங்களால் முடிந்த தொகையை மாரிமுத்துவிடம் கொடுக்க வேண்டும்;

இது அசலில் ஒரு பகுதி;விரைவில் மொத்த கடனையும் கொடுத்துவிடுகின்றோம் என்று சொல்ல வேண்டும்;அவர் நமது கடன் கணக்கில் இந்த அசலில் ஒரு பகுதியை வரவு வைக்க வேண்டும்;இப்படிச் செய்துவிட்டால் போதும்.அடுத்து வரக் கூடிய காலங்களில் கடன் தொகை ஏதாவது ஒரு ரூபத்தில் தீர்ந்துவிடும்;

இது கந்துவட்டிக்கு பொருந்தாது;இந்தியாவில் தென் மாநிலங்கள் மற்றும் இலங்கை,மாலத்தீவு இவைகளுக்கு மட்டும் தான் பொருந்தும்;

மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் தென் மாநிலங்களில் கடன் வாங்கி இருந்தால்,இந்திய நேரப்படி பணம் அனுப்ப வேண்டும்;

சிலருக்கு அவரவர் ஜனன ஜாதகப்படி ருணத்தை வாழ்நாள் முழுவதுமோ அல்லது வாழ்நாளில் குறிப்பிட்ட வயதுவரையோ அனுபவிக்க வேண்டியிருக்கும்;

சார்வரி & பிலவ வருட (2021 டூ 2022)

மைத்ர முகூர்த்தங்க்கள்

13.9.2021 திங்கள் காலை 10.16 முதல் 11.26 வரை;

23.9.2021 வியாழன் இரவு 8.24 முதல் 10.24 வரை;

10.10.2021 ஞாயிறு காலை 8.36 முதல் 10.36 வரை;

20.10.2021 புதன் மாலை 6.04 முதல் இரவு 8.04 வரை;

6.11.2021 சனி காலை 6.44 முதல் 8.44 வரை

17.11.2021 புதன் மாலை 4.03 முதல் 6.03 வரை;

4.12.2021 சனி விடிகாலை 5.14 முதல் 6.14 வரை;

14.12.2021 செவ்வாய் மதியம் 2.14 முதல் 4.14 வரை;

31.12.2021 வெள்ளி விடிகாலை 3.15 முதல் 5.15 வரை;

10.1.2022 திங்கள் மதியம் 1.10 முதல் 2.18 வரை;

11.1.2022 செவ்வாய் மதியம் 12.22 முதல் 2.22 வரை;

27.1.2022 வியாழன் காலை 11.40 முதல் மதியம் 1.40 வரை;

7.2.2022 திங்கள் காலை 11.02 முதல் மதியம் 1.02 வரை;

23.2.2022 புதன் நள்ளிரவு 1.10 முதல் 3.10 வரை;

6.3.2022 ஞாயிறு காலை 9.05 முதல் 11.05 வரை;

22.3.2022 செவ்வாய் இரவு 9.38 முதல் 10.45 வரை;

3.4.2022 ஞாயிறு காலை 6.47 முதல் 8.47 வரை;

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தின் மையபாகத்தை பயன்படுத்துவது நன்று;

குறையில்லாதவர் என்று எவரும் இல்லை;அந்தக் குறைகளை மட்டும் பார்த்தால் நம்மால் அனைவரோடும் அனுசரித்து வாழ இயலாது;

நிரந்தரமாக கடன் தீர வேண்டும் என்று விரும்புவோர் விழுப்புரம் அருகில் அமைந்திருக்கும் அண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்று கிரிவலம் வர வேண்டும்.

செவ்வாய்க்கிழமை காலை சூரிய உதயத்தில் இருந்து புதன் கிழமை காலை சூரிய உதயம் ஆவதற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;

ஒன்பது செவ்வாய்க்கிழமைகள் இவ்வாறு கிரிவலம் வருவதால் கடன் நிரந்தரமாக தீர்ந்துவிடும்;

தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செல்ல இயலாதவர்கள் மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை என்றும் கூட செல்லலாம்;

ஓம் அகத்தீசாய நம;

ஓம் ஸ்ரீவாரதாரகர் சித்தர் நம;

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews