தம்பதியர் ஒற்றுமைக்கு ஸ்ரீ தட்சிணாமூர்த்தி நவரத்னமாலிகா மந்திரம்- தினம் ஒரு மந்திரம்

தட்சிணாமூர்த்தியை வணங்கினால் ஞானம், அறிவு கிட்டும் என எல்லோருக்கும் தெரியும். தம்பதியர் ஒற்றுமைக்கு தட்சிணாமூர்த்தியை வணங்கி பலன் பெறலாம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது

வாமோரூபரிஸம்ஸ்திதாம் கிரிஸுதா

மன்யோன்யமாலிங்கிதாம்

ச்யாமாமுத்பலதாரிணீம்

சசிநிபாஞ்சாலோகயந்தம் சிவம்

ஆச்லிஷ்டனே கரேண புஸ்தகமதோ

பொருள்:

தன் இடது மடியில் பர்வத ராஜகுமாரியாகிய பார்வதி தேவியை இருந்தி அணைத்துக் கொண்டிருக்கும் ஈசனே, வணக்கம். கையில் நீலோத்பல மலரை ஏந்தி இளமை மிக்கவராய், சந்திர ஒளி போன்ற முகத்தையு டைய அம்பிகையை காதலுடன் பார்க்கின்றவரே, வணக்கம். அம்பாளை அணைத்த தன் திருக்கரத்தி னால் புத்தகத்தையும், கீழ்க் கரத்தில் அமிர்தம் நிரம்பிய கும்பத்தையும், இன்னொரு கரத்தில் ஞான முத்திரையையும், வேறொரு கரத்தில் முத்துமயமான ஜபமாலையையும் தரித்திருக்கிறவரே, தட்சிணா மூர்த்தியே! தங்களுக்கு நமஸ்காரம்.

வியாழக்கிழமையன்றும், பௌர்ணமி தினத்தன்றும் தட்சிணாமூர்த்தியின் படத்தின்முன் தம்பதி சமேதராய் அமர்ந்து இந்த நவரத்ணா மாலிகையை சொல்லி தட்சிணாமூர்த்தியை வணங்கிவர குருவருளால் திருவருளும், குடும்ப வளமும், தாம்பத்ய ஒற்றுமையும் கிட்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.