“2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் விஜய்க்கான தேர்தல் இல்லை” என்றும், “அவர் 2031 ஆம் ஆண்டு வரை பொறுமை காக்க வேண்டும்” என்றும், “அந்த தேர்தலில் தான் அவருக்கு வாய்ப்பு இருக்கிறது” என்றும் பிரபல பத்திரிகையாள ஒருவர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விருப்பம் தெரிவித்ததாகவும், ஆனால் விஜய் தரப்பிலிருந்து பல்வேறு நிபந்தனைகள் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கிட்டத்தட்ட நூறு தொகுதிகள், துணை முதலமைச்சர் அல்லது இரண்டரை வருடம் மாறி முதலமைச்சர் பதவி, அதிலும் முதல் இரண்டரை வருடம் நான்தான் முதலமைச்சர்” போன்ற அதிகப்படியான நிபந்தனைகள் தான் எடப்பாடி பழனிச்சாமியை பின்வாங்க வைத்தது.
அதன் பிறகு தான் அதிமுக-பாஜக கூட்டணி தற்போது ஏற்பட்டுவிட்ட நிலையில், திமுக கூட்டணியும் வலிமையாக இருப்பதால், “விஜய்க்கு வேறு ஆப்ஷனே இல்லை” என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“விஜய் ஒரு நல்ல வாய்ப்பை மிஸ் செய்து விட்டார்” என்றும், “இனிமேல் அவருக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்தவித ரோலும் இல்லை” என்றும், “2031 ஆம் ஆண்டு வரை பொறுமை காத்தால் அவருக்கு ஒருவேளை வாய்ப்பு கிடைக்கலாம்” என்றும் கூறியுள்ளார்.
ஆனால் விஜய் மற்றும் அவரது தரப்பினர் இன்னும் நம்பிக்கை உள்ள நாள் உள்ளனர். அதிமுக, திமுக என மாறி மாறி வாக்களித்த பொதுமக்கள், “மூன்றாவது தாக ஒரு கட்சி வராதா?” என்ற ஏக்கத்தில் இருப்பதாகவும், அந்த வாக்குகள் மற்றும் இளைய தலைமுறை வாக்குகள் ஆகியவை கிடைத்தாலே தன்னால் குறைந்தது 50 முதல் 100 சீட்டுகள் வரை பெற முடியும் என்று கூறி வருகின்றனர்.
அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர் கணித்தது நடக்குமா? அல்லது விஜய் தரப்பினரின் வியூகம் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.