சென்னை கடற்கரை 100 கோடியில் சீரமைக்கப்படும்… தமிழக அரசு அறிவிப்பு!
இன்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவிப்புகள்.
1. சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டடக்கலை மற்றும் திட்டமிடல் பள்ளியில் (SAP) இளநிலை திட்டமிடல் (B.Plan) என்று பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்கம் ரூபாய் 10 கோடி நிதி வழங்கும்.
2.பெருந்திரள் துரித இரயில் (MRTS) மனித நிலையங்களில் வணிக செயல்பாடுகள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மேற்கொள்ளப்படும்.
3. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் வாடகைதாரர்கள் சட்டம் 2017 மற்றும் நிறைவேற்றப்பட உள்ள தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமைச் சட்டங்களை செயல்படுத்தும் ஒழுங்குமுறை அதிகாரம் பெற்ற வீட்டுவசதி துறை இயக்ககம் என பெயர் மாற்றம் செய்யப்படும்
4. திருமழிசை, மீஞ்சூர் திருவள்ளூர் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நகரங்களுக்கு புதுநகர் வளர்ச்சித் திட்டம் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தால் தயாரிக்கப்படும்.
5.தன்னடக்கம் ஆடி குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதி வழங்கும் அதிகாரத்தை சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு அளித்தல்
6.சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் மெரினா முதல் கோவளம் இடையேயான சுமார் 30 கிலோ மீட்டர் நீளமுள்ள சென்னை கடற்கரை ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டு புத்தாக்கம் செய்யப்படும்.
7.சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் நீர் முனை மற்றும் ஏரிக்கரை மேம்பாடு ரூபாய் 100 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
8.சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய போக்குவரத்து வழிதடங்கள் ஒட்டி அமைந்துள்ள பகுதிகளுக்கு தள பரப்பு குறியீடு அதிகரிக்கப்படும்
9.செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் புதிய பேருந்து முனையங்கள் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் கட்டப்படும்
10, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மாவட்டம் திருவான்மியூர் சோழிங்கநல்லூர் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களில் சுய நிதி திட்டத்தின் கீழ் 3.18 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 105.50 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.
11. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 125 மேம்படுத்தப்பட்ட மனைகளில் ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் பொது தனியார் கூட்டு முறையில் குடியிருப்புகள் கட்டப்படும்.
12. கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் நெரிசலை குறைக்கவும் அதன் சிறந்த பயன்பாட்டினை அறியவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும்
13. இரண்டாம் முழுமைத் திட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி வரம்பிற்குள் முன்மொழியப்பட்டுள்ள 40 சாலை விரிவாக்கப் பணிகளில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் நிதி ஆண்டில் 10 சாலை விரிவாக்கப் பணிகள் ரூபாய் 200 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
14. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உள்ள 15 ஏக்கர் மற்றும் போரூரில் உள்ள இருபத்தி ஒரு ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்
15. சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் எல்லைக்குள் வலைப்பின்னல் சாலை அமைப்பு ரூபாய் 600 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.
16.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் சென்னை மாவட்டம் திருமங்கலத்தில் ஜீரோ புள்ளி 0.63 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் கட்டப்படும்
