தமிழக வருவாய் பற்றாக்குறை ரூ.3,000 கோடி குறைப்பு – நிதியமைச்சர்

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபோது பெறப்பட்ட ரூ.62,000 கோடியிலிருந்து, நடப்பு ஆண்டுக்கான ஆண்டு வருவாய் பற்றாக்குறையை தமிழக அரசு ரூ.3,000 கோடி குறைத்துள்ளது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

சட்டசபையில் 2023-24ம் ஆண்டுக்கான வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்வது குறித்து பேசிய அவர், அரசின் நடவடிக்கைகள் வருவாய் பற்றாக்குறையை குறைக்க உதவியுள்ளது.

“இது 2019-20 கோவிட்-க்கு முந்தைய ஆண்டை விட தோராயமாக ரூ. 5,000 கோடி குறைவாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக நிதியமைச்சர் டாக்டர் பி.டி.ஆர். தியாகராஜன் முந்தைய ஆண்டுகளில் வரி வருவாயில் ஏற்பட்ட வீழ்ச்சியே, பதவியேற்கும் போது அரசாங்கம் எதிர்கொண்ட நிதி அழுத்தத்திற்கு முக்கியக் காரணம் என்று கூறினார்.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் (SOTR) 2022-23 பட்ஜெட் மதிப்பீட்டில் 1,42,799.93 கோடி ரூபாயாக இருந்த நிலையில், திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 1,51,870.61 கோடி ரூபாயாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில், SOTR மேலும் ரூ.1,81,182.22 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளை விட 19.30 சதவீத வளர்ச்சியாகும்.

மேலும் வரும் ஆண்டுகளில், ‘மகளிர் உரிமை தொகை’ திட்டத்திற்கு (தகுதியுள்ள பெண் குடும்பத் தலைவர்களுக்கு ரூ. 1,000) ரூ. 7,000 கோடி ஒதுக்கப்பட்டாலும், வரலாற்றில் எந்த மாநில அரசும் செயல்படுத்தாத மிகப்பெரிய பணப் பரிமாற்றத் திட்டங்களில் இது ஒன்றாகும்.

2023-24 பட்ஜெட் மதிப்பீட்டில், வருவாய் பற்றாக்குறை ரூ.37,540.45 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதிப் பற்றாக்குறை ரூ.74,524.64 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டில் நிகர கடன்கள் ரூ.91,866.14 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

#BREAKING மகளிருக்கு மாதம் ரூ.1000 எப்போது?… தமிழக பட்ஜெட்டில் தேதி அறிவிப்பு!

மேலும் வளங்களைப் பெருக்குதல் மற்றும் வருவாய் சேகரிப்புத் திறனை மேம்படுத்துதல் மூலம் வருவாய் வரவுகளில் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பராமரிக்க மாநிலம் முயற்சிக்கும் என நிதி அமைச்சர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.