கடந்த ஆட்சியின் போது அதிமுக ஆட்சிக் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை திரும்பப் பெற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கி 2017-18 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில் (திருத்தம்) நிறைவேற்றியதற்கு எதிராக தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பப்பட்டதால், விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைக்க தமிழக அரசு கோரியது. உச்ச நீதிமன்றம் விசாரணையை 12 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என பட்டியலிடப்பட்டபோது, இந்த ரிட் மனு ஏன் தாக்கல் செய்யப்பட்டது என்றும் யாருடைய ஆலோசனையின் பேரில் தாக்கல் செய்யப்பட்டது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி, இந்த ரிட் முந்தைய அரசால் தாக்கல் செய்யப்பட்டது என்றும், தற்போதைய அரசு பிப்ரவரி 18ம் தேதி புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பிப்ரவரி 27-28 தேதிகளில் மழை !
எனவே, புதிய மனுவை விசாரிக்க வேண்டும் என்றும், முன்பு தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.