தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே போல் தேதியும் குறிப்பிடப்பட்டு அக்டோபர் 30-ம் தேதி நடைபெற இருந்தது.
இந்நிலையில் இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தேர்வர்கள் தயாராகி வந்தன. இந்த நிலையில் நிர்வாக காரணம் போன்றவைகளால் அக்டோபர் மாதம் நடைபெற இருந்த தேர்வானது வருகின்ற நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதன் படி, குடிமைப் பணிகளுக்கான குரூப்-1 தேர்வானது வருகின்ற நவம்பர் 19-ம் தேதி நடைப்பெற இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கூறியுள்ளது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.