வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்க்கு ஆபத்து : பிரதமர் மோடி காரசார பேச்சு..
ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். அப்போது இந்தியாவில் வாரிசு அரசியலால் ஜனநாயகத்திற்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு முன்னோடியாக காங்கிரஸ் இல்லையெனில் இந்தியாவில் வாரிசு அரசியல் இருந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார். மேலும் பல்வேறு ஊழல் நடந்திருக்காது எனவும் காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக்கொள்ளுங்கள் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சில தலைவர்கள் தங்கள் தொகுதியினை கூட கவனிப்பதில்லை எனவும் ராகுல் காந்தி குறித்து மோடி சாடியுள்ளார். எதிர்க்கட்சியான பிறகு நாட்டை பற்றிக் கவலைப்பட வேண்டாம் என சிலர் செய்கிறார்கள் என தெரிவித்தார்.
மேலும், ஆட்சியில் இருந்தாலும் எதிர்க்கட்சியில் இருந்தாலும் நமது நாட்டை தரம் தாழ்த்தி விமர்சிக்கக் கூடாது என குறிப்பிட்டார்.
