சென்னையில் மீண்டும் தலை தூக்கும் ‘ரூட் தல’ அட்ராசிட்டி, மாணவர்களுக்கு போலீஸ் வைத்த ஆப்பு!

ரூட் தல போட்டி விவகாரத்தில் கத்தியை கொண்டு ரயில் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மேலும் 2 பேரை திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் அடுத்து ஏகாட்டூர் ரயில் நிலையத்தில் கடந்த 16ஆம் தேதி ரூட் தல போட்டி விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

அந்த மோதலில் பச்சையப்பன் கல்லூரி மாணவர் தினேஷ் தலையில் வெட்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அப்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரயில் நிலையத்தில் கத்தியைக் கொண்டு பயணிகளை அச்சுறுத்தும் வகையில் தரையில் தேய்த்தப்படி நடந்து கொண்டனர் .

இந்த விவகாரத்தில் திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மாநில கல்லூரி பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பு சேர்ந்த 10 மேற்ப்பட்ட பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

அதில் கடந்த 23ஆம் தேதி அன்று திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த விஜய் (20 )என்ற பச்சையப்பன் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து மேலும் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாணவர் மெர்லின் (20 )சுமன் (20) ஆகிய இரண்டு பேரை ரயில்வே இருப்பு பாதை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பச்சையப்பன் கல்லூரி மாநிலக் கல்லூரி மாணவர்கள் 10 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பச்சையப்பன் கல்லூரி மாநில கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்ளும் விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருவதால்.இத்தகைய மாணவர்கள் மோதல்களை தவிர்க்கும் வகையில்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கை கடிதத்தை திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசார் பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment