சென்னையில் ரைசிங் ஸ்டார் கிளப் நடத்திய 17வது ஆண்டு மாநில அளவிலான கூடை பந்து போட்டியில் 115 அணிகள் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்களுக்கான இறுதி லீப் போட்டியில் இந்தியன் வங்கி அணி 96க்கு 93 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி நாகன் மெமோரியல் கோப்பையை கைப்பற்றியது. சென்னை லயோலா கல்லூரி அணி மூன்றாம் இடத்தையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணி நான்காம் இடத்தையும் பெற்றது.
மகளிருக்கான இறுதி லீக் சுற்றில் ரைசிங் ஸ்டார் அணி 68 67 என்ற புள்ளி கணக்கில் எஸ் பி சி அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. ஹிந்துஸ்தான் ஜாமர் சனி மூன்றாம் இடத்தையும் தமிழ்நாடு போலீஸ் அணி நான்காம் இடத்தையும் கைப்பற்றின.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பை உடன் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. மொத்தம் 2லட்சம் ரூபாய் சிறப்பு விருந்தினர் எம் ஓ பி மகளிர் கல்லூரி முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் வழங்கினார்.
மக்களே வெளிய போகாதீங்க… இன்று தொடங்குகிறது ஆபத்து!
ரைசிங் ஸ்டார் கூடை பந்து கழக செயலாளர் என் சம்பத் தமிழ்நாடு கூடைப்பந்து கழக செயலாளர் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.