முகம் அழகாக இருக்க வேண்டுமென எல்லோரும் நினைப்பதுண்டு. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். அழகான உள்ளம் இருந்தாலே முகம் வசீகரமாகும். முருகு என்றால் அழகு என்று பொருள். முருகனை வேண்டினால் வசீகரமான முக அழகை பெறலாம்.
மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி!
காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலர்அடி போற்றி!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி! போற்றி
செவ்வாய் கிழமைக, கிருத்திகை, சஷ்டி திதியில் காலை அல்லது மாலை வேளையில் அருகிலுள்ள முருகன் கோவிலுக்கோ அல்லது முருகன் சந்நிதிகோ சென்று, விளக்கெண்ணை அல்லது நெய் தீபமேற்றி இந்த துதியை 9 முறை பாடி முருகனை வணங்க உங்கள் முகத்தில் இருக்கும் துரதிஷ்டத்தன்மை நீங்கி பிறருக்கு உங்களிடம் ஒரு வசீகரம் உண்டாகும்.
நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!