News
இன்று நள்ளிரவு முதல் 21 நாட்கள் நாடு முழுவதும் முடக்கம்!
பிரதமர் நரேந்திர மோடி தற்போது நாட்டு மக்களுக்கு நேரலையில் உரையாற்றி வருகிறார்.

அதில், கொரோனாவை கட்டுப்படுத்த தனித்திருத்தல் மட்டுமே எளிய வழி எனவும், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த இன்று இரவு நள்ளிரவு 12 முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், இந்த 21 நாட்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
