கோடிங் எழுத ChatGPT-ஐ பயன்படுத்துகிறோம்: சாப்ட்வேர் நிறுவனங்கள் தகவல்..!

கோடிங் எழுத தற்போது ChatGPT தொழில்நுட்பத்தை தான் பயன்படுத்துகிறோம் என பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏஐ என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் இதை பயன்படுத்தி வேலையை எளிதாக்கி கொள்கின்றனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் பல மென்பொருள் நிறுவனங்கள் தற்போது ChatGPT என்ற தொழில்நுடத்தை தான் பயன்படுத்துகின்றன என்றும் அதன் முடிவுகள் கச்சிதமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளன. மேலும் கோடிங் எழுத 80 சதவீதம் நேரம் குறைந்துள்ளதாகவும் பல மாதங்கள் எடுக்கும் ஒரு ப்ராஜெக்ட் ஒரு சில நாள்களில் ChatGPT-ஐ பயன்படுத்துவதால் முடிக்க முடிகிறது என்றும் முன்னணி ஐடி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

ChatGPT என்பது இயற்கையான உரையாடல்களை நடத்தக்கூடிய மற்றும் மனிதனைப் போன்ற பதில்களை வழங்கக்கூடிய சக்திவாய்ந்த சாட்போட் ஆகும். கூடுதலாக, குறியீடு தொடர்பான சிக்கல்களைப் புரிந்துகொண்டு தீர்க்கும் அதன் திறன் மென்பொருள் உருவாக்குநர்களுக்கு சிறந்த கருவியாக அமைகிறது.

குறியீட்டை எழுத பல மென்பொருள் நிறுவனங்கள் இப்போது ChatGPT ஐப் பயன்படுத்துகின்றன, மேலும் முடிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன. எடுத்துக்காட்டாக, குறியீடு எழுத எடுக்கும் நேரத்தை 80% குறைக்க முடிந்ததாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. பல மாதங்கள் எடுக்கும் திட்டத்தை ஒரு சில நாட்களில் முடிக்க முடிந்ததாக மற்றொரு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ChatGPT என்பது மிக முக்கியமான தொழில்நுட்பம் என்றும், சாஃப்ட்வேர் உலகில் ChatGPT புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினார். மேலும் இது டெவலப்பர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மிகவும் சிக்கலான மற்றும் அதிநவீன பயன்பாடுகளை உருவாக்குவதை சாத்தியமாக்கும் என்றும் தெரிவித்தார்..

ChatGPT மென்பொருள் மேம்பாட்டுத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது ஏற்கனவே பல நிறுவனங்களால் பெரும் அளவில் பயன்படுத்தபடுகிறது, மேலும் இது வரும் ஆண்டுகளில் மேலும் பிரபலமடைய வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

ChatGPT தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேலைகளை சுலபமாக்குகிறதோ அந்த அளவிற்கு வேலை வாய்ப்புகளையும் குறைக்கும் தன்மை கொண்டது என்பதும் இந்த தொழில்நுட்பம் அதிகரிக்க அதிகரிக்க வேலை வாய்ப்புகள் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. 100 ஊழியர்கள் சேர்ந்து செய்யக்கூடிய ஒரு வேலையை ChatGPT ஒரு சில மணி நேரங்களில் செய்து விடுவதால் பல ஊழியர்கள் வருங்காலத்தில் வேலையிழக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews