#Breaking ஏரியில் படகு கவிழ்ந்து 6 பேர் உயிரிழப்பு; 4 பேரை தேடும் பணி தீவிரம்!

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பொட்டலகுரு ஏரியை வேடிக்கை பார்ப்பதற்காக மீன்பிடிக்கும் படகில் சென்ற 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொடலகுரு அருகே தோடேரு கிராமத்தில் உள்ள ஏரியை சுற்றிப்பார்ப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை மாலை 10 இளைஞர்கள் மீன்பிடி படகில் சென்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக அவர்கள் பயணம் செய்த படகு விபத்தில் சிக்கியுள்ளது. இதனால் அதில் பயணம் செய்த பத்து பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

தண்ணீரில் மூழ்கியவர்களில் மகேஷ், மகேந்திரன், யானை விஷ்ணுவர்தன், அட்ட கிரண் ஆகிய 4 பேர் மட்டும் பத்திரமாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர். ஆனால் சல்லா பிரசாந்த் (29), மண்ணூர் கல்யாண் (27), பட்டா ரகு (23), பதி சரேந்திரா (19), யாட்டம் பாலாஜி (21), அல்லி ஸ்ரீநாத் (17) ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

விபத்தில் உயிரிழந்த 2 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கையில், படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி வந்ததால் கவிழ்ந்திருக்கலாம் என்றும், இதில் 4 பேர் மட்டும் நீந்தி கரையேறிய நிலையில் மீதமுள்ள 6 பேர் தேடும் பணி நடைபெற்று வருவதாகடும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.