சிவலிங்கத்தில் எத்தனை வகைகள் இருக்குன்னு தெரியுமா?!

9004b4682db9a693ce4082a6f34e66a6-1

சிவலிங்கம்= சிவ + லிம் + கம்: சிவம் – இறைவர், லிம் – அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் – ஒடுங்கிய அப்பொருள்கள் (சராசரங்கள்) மீண்டும் தோன்றும் இடம்.ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும், அழித்தும் அருளச்செய்ய்யும் வடிவமே சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின் அடிப்பாகம் –  நாற்கோண வடிவினதாய் இருக்கும் – இது பிரம்ம தத்துவம். சிவலிங்கத்தின் நடுப்பாகம் – எண்கோண வடிவினதாய் இருக்கும் – இது விஷ்ணு தத்துவம் (இது ஆவுடை எனப்படும்.) சிவலிங்கத்தின் மேல்பாகம் – நீண்ட வட்ட வடிவினதாய் இருக்கும் – இது சிவ தத்துவம் (இது பாணம் எனப்படும்.) இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் – உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப்பாகத்தில் – ஈஸ்வரனும், இந்த பாணத்தின் மேல்பாகத்தில் –  சதாசிவனும் இருக்கிறார்கள்.

cda9132f6b4f7f64c97b3202273e216a

சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும், அவை: 1. பரார்த்தலிங்கம் – (திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத்தக்க வகையிலே கருவறையில் எழுந்தருளியிருப்பது.) 2. ஆன்மார்த்தலிங்கம் அல்லது இஷ்ட லிங்கம் – (விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீட்சை பெற்று வீடுகளில் வைத்து பூசிப்பது).
விஞ்ஞானிகள் அணுவை (எலக்ட்ரான்) ஆராய்ச்சி செய்தபோது, அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும், அதன்மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாக குறிப்பிட்டுள்ளார்கள். இந்த பச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்தது என்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை. இத்தகையை அற்புதமான இலிங்க வடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான் பெரிய  புராணத்தில் கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews