“கங்காருவை சுட்டுக் கொன்றுவிடலாம்?“உலகமே அதிர வைத்த ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியாவில் கங்காருக்கள் அதிகரித்து வரும் நிலைகள் அவை பட்டினியால் இறப்பதற்கு முன்பு சுட்டுக் கொல்ல கோரிக்கைகள் வலுத்து வருகின்றன, அப்படி என்னதான் நடக்கிறது ஆஸ்திரேலியாவில் வாங்க பார்க்கலாம்.

ஆஸ்திரேலியா மிகச்சிறிய கண்டம் மிகப்பெரிய தீவு. இந்த அழகிய நாட்டின் அடையாளமே கங்காருக்கள் தான். முழு வளர்ச்சியில்லாமல் பிறக்கும் தன் குட்டிகளை வயிற்றில் உள்ள பைக்குள் வைத்து வளர்க்கும் உடல்வாகை கங்காருகளுக்கு பரிசளித்துள்ளது இயற்கை என்னும் அதிசயம்.

இத்தீவின் சின்னமாக இருந்து வந்த கங்காருக்கள் தான் தற்போது தீரா தலைவலியாக மாறி உள்ளது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு தானே, இலங்கைக்கு குரங்குகள் எப்படியோ அப்படித்தான் ஆஸ்திரேலியாவுக்கு கங்காருக்கள்.

ஆஸ்திரேலியாவில் மக்கள் தொகையை விட கங்காருக்கள் எண்ணிக்கை இரண்டு மடங்கு என்பது போல அதிகம்.ஏற்கனவே வணிக காரணங்களுக்காக சிறிய எண்ணிக்கையில் ஆன கங்காருகலை கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .

கங்காருக்களின் எண்ணிக்கை அபரி விதமாக அதிகரிக்கும் பட்சத்தில் அவை போதுமான உணவின்றி பட்டினியால் இரக்க நேரிடும், உணவு கிடைக்காமல் அவை விவசாய நிலங்கள் மக்கள் வாழ்விடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தும். கடந்த வறட்சி காலத்தின் போது மட்டும் சில பகுதிகளில் 80 முதல் 90% கங்காருக்கள் உணவின்றி உயிரிழந்த உள்ளன .

வறட்சி உண்ண உணவு இல்லை நேரே பொதுக்கழிவறைகளுக்குள் நுழையும் கங்காருக்கள் அங்குள்ள கழிவறை காகிதங்களை எடுத்து உண்ண தொடங்கின, பல கங்கா ஆட்கள் அதற்கு கூட வழிகின்றி சாலைகளில் இறந்து கிடந்தன ,பசியின் கொடுமை பட்டவருக்கு தானே தெரியும் ,அது போல இந்த ஜீவன்கள் வாழ வழி இல்லாமல் இடத்தில் எங்கு சென்ற பசியாற்றும் .

கடந்த வறட்சி காலத்தில் ஏற்பட்ட அதே நிலைமை மீண்டும் நிகழ நெடுங்காலம் இல்லையென ஆய்வாளர்கள் கருதுகின்றன , இன்னும் சில வருடங்களில் ஆஸ்திரேலியாவில் கங்காருக்கள் எண்ணிக்கை ஆறு கோடியாக வாய்ப்புண்டு என கூறப்படுகிறது. இது அந்நாட்டின் மக்கள் தொகையை விட இரண்டு புள்ளி மூன்று மடங்கு அதிகம்.

மேலும் கருத்தடை கங்காரு எண்ணிக்கையை கட்டுப்படுத்த உதவும் என்றாலும் அவை குறைவாகவே பயன் அளிப்பதாக விக்டோரியா மாகாண அரசாங்கம் கருதுகிறது, வேலி அமைக்கவும் அவை பராமரிக்கவோ செலவு கட்டுப்படியாகாது ,அதற்கான ஒரே வழி கங்காரு கலை சுட்டுக் கொள்வது தான்.

சப்பாத்தியை இப்படி ஒரு முறை ட்ரை பண்ணுங்க …கோடி நன்மைகள் கிடைக்கும்!

ஒரே தோட்டாவில் உயிர் போய்விடும், பசியால் அவை துடிதுடித்து இறப்பதற்கு இதுவே சிறந்த வழி என முன்பை தெரிவித்திருந்தது விக்டோரியா மாகாண அரசு .பட்டினியால் நம் கண் முன்னே அவை இறப்பதற்கு முன்பு நாமே அதை சுட்டுக்கொன்று விடலாம் என யோசனை கூறுகின்றனர் . கொலை செய்வதை விட வேற எதுவும் பாவம் இல்லை என களமிறங்கியுள்ளனர் .

விலங்கு நல ஆர்வலர்கள் ஆனால் கொல்வது பாவம் என்றால் அவற்றை பட்டினியால் இறக்க விடுவது அதைவிட பெரிய பாவம் தானே என்பதுதான் இந்த சூழலில் வாதமாக உள்ளது ,கங்காரு பிரச்சனைக்கு ஆஸ்திரேலியா அரசாங்கத்தின் நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...