தந்தையில் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை வழங்ககோரி நடிகர் சிவாஜி மகள்கள் தாக்கல் செய்த மனு மீதன விசாரணையை ஜூலை 18-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
நடிகர் சிவாஜியின் சொத்துக்களில் பங்கு தராமல் தனது சகோதரர்களான நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஏமாற்றி விட்டதாகவும், தந்தையின் சொத்துகளில் தங்களுக்கும் உரிமை உள்ளதாக கூறி மகள்கள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சிவில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு கிருஷ்ணன் ராமசாமி விசாரணைக்கு வந்த போது சாந்தி தியேட்டர் பங்குகள் முழுவதும் 2010-ம் ஆண்டில் கைமாறி விட்டதாகவும், கட்டுமானம் முடித்தப்பிறகும் அவர்களின் குடும்பப் பிரச்சினை காரணமாக குடியிருப்புகளை விற்க முடியாத நிலையில் இருப்பதாக தனியார் கட்டுமான நிறுவனமான அக்ஷயா ஹோம்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால் நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் தொடர்பில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் மனுதாரரான சாந்தி மற்றும் ராஜ்வி தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற நீதிபதி விசாரணையானது ஜூலை 18-ம் தேதிக்கு தள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.