சிக்கன் பிரியாணிக்கு பதிலா புரோட்டின் சத்து நிறைந்த சென்னா பிரியாணி ட்ரை பண்ணலாம்.. ரெசிபி இதோ!

பிரியாணி சொன்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் இந்த பிடித்தமான உணவை சத்தானதாக மாற்ற வேண்டியது நமது கடமை.. பொதுவாக பிரியாணியில் அனைத்து வகையான காய் சேர்த்து செய்வது உண்டு, மேலும் அதில் சிறப்பாக பட்டாணி சேர்த்தால் சிறப்பாக இருக்கும் இந்த முறை புதுசாக பட்டாணிக்கு பதிலாக சென்னா சேர்த்து பிரியாணி ட்ரை பண்ணலாம்.

தேவையான பொருட்கள் :

வெள்ளை கொண்டைக்கடலை – 150 கிராம்

பாசுமதி அரிசி – 200 கிராம்

வெங்காயம் – 1

தக்காளி – 2

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

உப்பு – சுவையும் ஏற்ப

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகாய்த்துள் – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1 தேக்கரண்டி

தயிர் – 1 தேக்கரண்டி அல்லது பாதி எலுமிச்சை சாறு

புதினா இலை, மல்லி இல்லை – சிறிதளவு

தாளிக்க தேவியான பொருட்கள் :

பட்டை, கிராம்பு – 2

ஏலக்காய்,பிரியாணி இலை – 1
முந்திரி- 10
நெய் – 3 தேக்கரண்டி
எண்ணைய் – தேவையான அளவுக்கு

செய்முறை :

பாசுமதி அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து நன்றாக கழுவி குக்கரில் 2 விசில் வரும் வரை உதிரியாக வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

அடுத்து வெள்ளை சென்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு, மஞ்சள் போட்டு வேக வைத்து கொள்ளவும்.

பின்பு வெங்காயம், தக்காளி, இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து கிராம்பு , பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு தாளித்த பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும். தூக்கில் இருந்து எண்ணெய் பிரியும் வரை மிதமான தீயில் வதக்கவும்.

விழுது நன்றாக வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும். இதில் சிறிதளவு தனியா தூள் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

அடுத்ததக்க தயிர், பாதி எலுமிச்சை சாறு சேர்த்து ஒள்ளவும்

பாரம்பரிய உணவான இஞ்சி தேங்காய் சாதம்! ஒருமுறை சாப்பிட்டா மறக்கவே மாட்டிங்க…

அடுத்து அதில் புதினா, மல்லி இலை வேகவைத்த சென்னா சேர்த்து கிளறி, இறுதியில் சாதம் சேர்த்து கிளறி 5 நிமிடம் மிதமான தீயில் மூடிவைத்து கொள்ளவும் .

பின்பு இறக்கி அதில் நெய் சேர்த்து கிளறிக்கொண்டு பரிமாறவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews