அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சசிகலா மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலையின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த டிசம்பர் 29, 2016 அன்று நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலா அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
2017 பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு அனுப்பப்பட்டதையடுத்து, 2017 செப்டம்பரில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அவரையும் டிடிவி தினகரனையும் கட்சியில் இருந்து நீக்கி, பொதுச் செயலாளர் பதவிக்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர்.
இதை எதிர்த்து சசிகலா சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏப்ரல் 11, 2022 அன்று, சென்னை IV கூடுதல் நகர சிவில் நீதிமன்ற நீதிபதி, அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தார். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சிவில் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தமிழகத்தின் அடுத்த சில நாட்களுக்கு மழை !
சிட்டி சிவில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, அவரது மேல்முறையீட்டை நிராகரிக்கக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் செம்மலையும் வழக்கு தொடர்ந்தார்.