இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர்.இந்த படத்தில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, நடிகை ஐஸ்வர்யா ராய், திரிஷா பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.
துணை நடிகர்களில் நிழல்கள் ரவி, நாசர், அஷ்வின் காக்கமானு, ரியாஸ் கான், பாலாஜி சக்திவேல், குமரவேல், வினோதினி வைத்தியநாதன், மாஸ்டர் ராகவன் போன்ற பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அர்ஜுன் சிதம்பரம் பாபு ஆண்டனி, மகரந்த் தேஷ்பாண்டே, ஆதேஷ் பாலா, விஜய் யேசுதாஸ் மற்றும் அம்சத் கான்.
படத்தின் முன்னணி ஹீரோவாக அருள்மொழி வர்மன் என்ற டைட்டில் ரோலில் நடிக்கும் ஜெயம் ரவிக்கு தான் படத்தில் அதிக சம்பளம் வாங்கி வருவதாக பரவலான தகவல் பரவி வருகிறது. மேலும் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் கார்த்தி ஆகியோர் படத்தில் நடிக்க அதிக பணம் வசூலிதத்தாகவும் கூறப்படுகிறது .
இன்சூரன்ஸ் இல்லாத பைக்கில் ஊர் சுற்றும் அஜித் ! எப்போ எங்க தெரியுமா?
இந்நிலையில் படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் குறித்த செய்தி ஆதாரமற்றது, என ‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர்.படத்தின் புரொமோஷனுக்காக இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் பல வெளிநாடுகளிலும் படத்திற்கான பரபரப்பான விளம்பர சுற்றுப்பயணத்திற்கு தயாராகி வருகின்றனர் படக்குழு.